பிரியாவிடை
என்னிடமும் இருக்கிறது
புதையலென பாதுகாக்கப் பட்டிருக்கும் உனக்கான பரிசுப்பொருள்
வாசிக்கப்படாத கவிதைகளாக!
உதிர்த்துப் போவதற்கும் களைந்து போவதற்கும் முயலாத உந்தன் நினைவுகளை சுமக்கும் இருக்கைகள் வாசிக்கப்படாத கவிதைகளாக!
உயர பறக்க ஆசைப்பட்டு
உலுத்துப் போன சிறகுகளை ஒத்த நிறைவேற்ற இயலா வாக்குறுதிகள் வாசிக்கப்படாத கவிதைகளாக!
மொழியாளுமையற்ற மௌனங்களை உடைத்திடும் அன்பால் தோய்ந்த கரடுமுரடான வார்த்தைகள் வாசிக்கப்படாத கவிதைகளாக!
நேரில் வர இயலாவிட்டாலும் மன மராமத்து செய்யும் உனக்கான பரிசு பொருள் என்றும் நிறைந்து வழிந்து கொண்டேதான் இருக்கும் எரிமலைகுழம்பினைப் போல வாசிக்கப்படாத கவிதைகளாக ஆனால் இயற்கைக்கு மாறாக அதீத குளிர்ச்சியுடன்
பிரியாவிடையளிக்க!
- இரா. மதிஒளி சரவணன்