சுடுகாட்டில்

தானும் வாழ்ந்து
தன்னையும் வாழவிட்ட
மனிதர்களை
புத்தனை போல பாவித்து
போற்றி வளர்ந்த
மரத்தை

வெட்டி சாய்த்தவர்களை
விட்டு விடாமல்
தேடி பிடித்து
தான் அழிந்ததுபோல்
அவர்களையும் எரித்து
அழித்தது சுடுகாட்டில்

எழுதியவர் : கோ. கணபதி. (2-Dec-21, 4:14 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : sutukattil
பார்வை : 32

மேலே