உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே அவ்வாய தாகும் அறம் – அறநெறிச்சாரம் 40

நேரிசை வெண்பா

ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துள்ளெல்லாம்
ஒன்றோடொன் றொவ்வாப் பொருடெரிந் – தொன்றோடொன்
றொவ்வா உயிரோம்பி உட்டூய்மை பெற்றதே
அவ்வாய தாகும் அறம் 40

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஒன்றுக்கொன்று மாறுபட்ட புறச்சமய நூல்கள் பலவற்றுள்ளும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட பொருள் இவையென ஆராய்ந்தறிந்து ஒன்றோடு ஒன்று ஒவ்வாத பலவகைப்பட்ட உயிர்களைக் காத்து அகத்தூய்மை பெற்றதே சிறந்த அறமாகும்.

குறிப்பு: உள் - அகம்; மனம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 6:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே