ஆராய்ந்து நம்புக நல்ல அறம் – அறநெறிச்சாரம் 39
நேரிசை வெண்பா
இறந்தும் பெரியநூ லெம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதேசென் றாற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம் 39
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
இல்லறத்தினின்று நீங்கி அகப்பற்றுப் புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடம் இருந்தே பெற்றுச் சொன்னதனால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே அறமும் இதுவே;
நீவிரும் நன்கு ஆராய்ந்து நல்ல அறமாகிய இதனை நம்பி மேற்கொள்வீர்களாக.