ஆராய்ந்து நம்புக நல்ல அறம் – அறநெறிச்சாரம் 39

நேரிசை வெண்பா

இறந்தும் பெரியநூ லெம்மதே தெய்வம்
அறந்தானும் இஃதேசென் றாற்றத் - துறந்தார்கள்
தம்பாலே வாங்கி யுரைத்ததனால் ஆராய்ந்து
நம்புக நல்ல அறம் 39

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

இல்லறத்தினின்று நீங்கி அகப்பற்றுப் புறப்பற்றுக்களை முழுவதும் விட்டவர்களிடம் இருந்தே பெற்றுச் சொன்னதனால் மிகவும் சிறந்த நூல் எம்முடையதே; தெய்வமும் இதுவே அறமும் இதுவே;

நீவிரும் நன்கு ஆராய்ந்து நல்ல அறமாகிய இதனை நம்பி மேற்கொள்வீர்களாக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Dec-21, 5:53 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே