தமிழ்க் கவிதை எழுதக் கற்றிடு
குறள் வெண்பாக்களால்
1.சின்னஞ் சிறுகவிதை யென்றா லுமேநீயும்
சின்னக் குறளில் எழுது
2..தமிழா இலக்கணப்பா வைநீ எழுதிப்
பழக உயரும் தமிழ்
3.தமிழில் கிறுக்கி தமிழை அழிக்கும்
தமிழனா நீயும் பகரு
4. மேலுள்ள யாப்பு இலக்கணப் பாடல்போல்
மேலும் சிலதை எழுது
5. ஒன்றுமூன்றில் தான்வரிக்கும் மோனை எதுகையும்
ஒன்றி வரவே யொழுங்கு
(, முத்ல், மூன்றாம் சீரில் மோனை வரிக்கு முதல் சீரில்
எதுகை வைத்திட வேண்டும்)
......