மௌனமாய் ஓர் உரையாடல்

புழுதியில் விழுந்தது மலர்
புன்னகை மாறவில்லை
புழுதியில் விழுந்த மலரை
மெல்லிய விரலால் எடுக்கிறாள்
புன்னகை மாறாமல்
மலரின் மங்கையின் புன்னகையில்
மௌனமாய் ஓர் உரையாடல் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Dec-21, 10:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே