விழிநோக்கும் தூரத்தில்

விழிநோக்கும் தூரத்தில்
நிலவொளியில்
நீ சிரித்தாய்
விண்மீனைப் போலத்தானே
உன் அருகில்
நீ அழைத்தாய்....

அலையாத்திக் காடுபோல
உன் கூந்தல்
அசைந்தாடி அழைக்குதடி

அலைமோதும் கரையைப்போல
உன் பார்வை -எனைத்தேடி
அழையுதடி

நீயென்ன அயல்தேச
ஏஞ்சலா இல்லை எனை
ஆட்டுவிக்கும் ஊஞ்சலா..

உனைப்பார்க்க
நானும் வந்தேன்
தெப்பத்தேரில் தேவதையாய்
தெய்வம்தந்த காதலியாய்...

விழிநோக்கும் தூரத்தில்
எனைச் சுமந்து செல்கின்றாய்
தெப்பத்தேரின் பேரல்போல
எனைச்சுமக்க வந்தவனே
எனைச்சுமந்து செல்கின்றாய்..

உன் இதயம் நனைந்த
தெப்பமாய்
நம் காதல் நனைந்து
செல்லுதே
அந்தக் காட்சியைக்
கண்டு கடவுழும்
கொஞ்சம் பூமழை
பொழியுதே

தெப்பத்தேரின் தேவதையே
என் தேகமுழுக்க வந்துவிடு
என் வாழ்கை முழுதும்
வாழ்ந்துவிடு வாழ்ந்துவிடு வாழ்ந்தூவிடு

எழுதியவர் : இரா.அரிகிருஷ்ணன் (15-Dec-21, 7:10 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 289

மேலே