காத்திருப்பே காதல்

புதையல் தேடுகிறேன்
உந்தன் உதயத்தில்
அன்பு கிடைக்குமா
என்ற ஏக்கத்தில்....

வளையல் ஓசை
கேட்கிறது காதோரம்
கண்கள் தேடுகிறது
நீ இருக்கும்தூரம்...

பிறப்புக்கும் இறப்புக்கும்
வெகுதூரம் என்றிருந்தேன்
உன்னை கண்டதும்
நான் சரணடைந்தேன்....

பட்டாம் பூச்சியாய்
வானில் சிறகடித்தாய்
என் வாழ்க்கையே
நீதானென்று உணரவைத்தாய்....

காதல் வருவது
தெரியாது என்றனர்
உன்னை பார்த்ததும்
காதலே நீதானென்றது...

காத்திருக்கிறேன்...
காதலாய் வருவாய்யென்று....

எழுதியவர் : பிரதீஷ் நாகேந்திரன் (2-Jan-22, 6:31 pm)
பார்வை : 347

மேலே