விழுதுகள்
விழுதுகள்
விழிகளின் விழுதுகளாய் இதயத்தில்
பாயும் காலத்தின் சுமைகள் துவக்கமே!
இனிமை காதல் வளர்ந்தன ஆலமரமாய்
ஆக்கத்தின் முதல் தாக்கங்கள்முலைத்தன
ஆலமரம் விரிந்தன மண்ணில் நிலையாய்
ஆழமான காதல் வேர்கள் போல் பின்னிய
பின்னல் சடை போல் நாளும் இருந்தன
புலரும் மொழி கவிதைகள் கவியமானது
நெஞ்சில் நிறைந்த மொழிகள் தடங்கள்
தன்னை மறந்த நாட்கள் எத்தனையே !
வரிகளின் தூவிய விதைகள் ஆலமரம்
விழுதுகளாய் வளர்ந்து அன்பும்
ஊனியை வேர்கள் வளர்ந்த மரம் கண்டு
வேர்களின் வலிகள் இருந்தாலும் விழுது
வீழ்வது பயன் இயற்கையின் அழகுகள்!
காலத்தின் மாற்றம் காதலும் இப்படிதான்
இதயத்தில் பேசும் மொழிகள் யாவும்
காதல் அன்பு உயிரின் விழுதுகளாய் மண்ணில் நீண்டு வாழ வழிபிறக்கும்
உரிமையில் பூத்த உறவுகள் மலரட்டும்
புதுக் கவிதைகள் பாடும் வானம்பாடி மகிழட்டும் புதிய வழிபாட்டில் காணும் உள்ளமும் உணர்வுகள் விழுதுகளாய்
வாழ்வில் நிலையான காவியமாகட்டும்
புதிய பாதை புதுயுகம் புலரும் காதல்
வாழ்வாங்கு வாழ்ந்து வளரும் மாந்தருக்கு
ஆயிரம் காலத்துப்பயிர் போல்-இனிவரும்
இன்பம் காண விழுதுகள் போல் வாழ