ஆங்கின்னா யாமென் பவரொடு நட்பு - இன்னா நாற்பது 24

இன்னிசை வெண்பா

ஏமமில் மூதூ ரிருத்தன் மிகவின்னா
தீமை யுடையா ரயலிருத்த னன்கின்னா
காம முதிரின் உயிர்க்கின்னா1 வாங்கின்னா
யாமென் பவரொடு நட்பு. 24

- இன்னா நாற்பது

பொருளுரை:

காவல் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும்;

தீச்செய்கை உடையவரது அருகிலிருத்தல் மிகவும் துன்பமாகும்;

காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும்;

அவ்வாறே யாமென்று செருக்குடன் இருப்பவரோடு கொள்ளும் நட்பானது துன்பமாகும்.

ஏமம் - மதிற்காவலும், அரசின் காவலும் ஆம். அயலிருத்தல் என்றமையால் அவரைச் சேர்ந்தொழுகுதல் எனச் சொல்ல வேண்டியதில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jan-22, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே