வாழ தான் விடுமா
மனக் கோட்டை கட்டி
மகிழும் பெண்ணிடம்
காதலை சொல்லி
கை பிடிக்க நினைக்கும்
காதலன் தரும் நம்பிக்கை
தேர்தலுக்கு முன்
தருகின்ற வாக்குறுதி போல
பொன்னும், பொருளும்
பட்டாடைகளும்
அட்சய பாத்திரம் போல்
அனைத்தும் அள்ளி தருவாரென
அகமகிழ்ந்த பெண்
நிலவுப் பெண்போல
நிம்மதியோடு வாழலாமென
நம்பி தலை நீட்டியவளுக்கு
காலமுழுதும் வேலையின்றி
கை பிடித்தவளின் வீட்டிலிருந்து
அனைத்தையும் எதிர்பார்த்து
அபகரிப்பது, நிம்மதி தருமா?
அவளை வாழதான் விடுமா?