தக்கணை வேள்வி தவங்கல்வி - ஆசாரக் கோவை 3
சிந்தியல் வெண்பா.
தக்கணை வேள்வி தவங்கல்வி யிந்நான்கும்
முப்பா லொழுக்கினாற் காத்துய்க்க உ'ய்'க்காக்கால்
எப்பாலு மாகா கெடும். 3 ஆசாரக் கோவை
பொருளுரை:
ஆசிரியர்க்குத் தட்சணை கொடுப்பது, யாகம் பண்ணுவது, தவம் செய்வது, கல்வி ஆகிய இந்நான்கினையும் மனம், மொழி, மெய் என்னும் மூன்றும் மாறுபடாது ஒழுகுமாறு காத்துச் செய்து வரவேண்டும்.
இவ்வாறு ஒருநெறியில் செலுத்தாவிட்டால் எவ்வுலகத்திலும் இந்நான்கும் தனக்குப் பயனாகாமல் கெட்டு விடும்.
கருத்துரை:
தட்சணை முதலியவற்றைக் காலதாமதமின்றி ஒருமனதோடு செய்து முடிக்க வேண்டும்.
இப்பாடல் மூன்றடியாலும், தனிச்சொல் இல்லா மலும் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.