பசு

பத்து வருடங்களாய் தினமும்
'வாங்கக் குடம் நிறைத்த ' வள்ளல்
பெரும் பசு.... இப்போது பால் சுரக்காது போக
இதோ மாட்டுக் காரன் அந்த பசுவை
இழுத்து செல்லுகிறான் 'கசாப்பு கடைக்கு'
பசு நினைத்தது 'நான் ஏன் மனிதன்போல் பிறக்கவில்லை
இதைத் தட்டி கேட்க.... நியாயம் கேட்க

பசுவதை தவிர்க்க
வாழவைக்கும் தெய்வம் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jan-22, 8:26 pm)
Tanglish : pasu
பார்வை : 39

மேலே