முகாரி பாடும் வானம்
முகாரி பாடும் வானம்
மேகத்தின்
முந்தானையில்
மூடி வைத்த
நிலவு முகத்தை
காற்று வந்து
விலக்கி பார்த்து
விட்டான்.
அவளின் சிவந்த
முகம் வெளியில்
தெரிய
முக அழகில்
மின்னலுக்கு
உற்சாகம் பெருக்கெட
மின்னி மின்னி
ஓடி வருகிறான்
இதுவரை
இவள் முகத்தை
மூடி வைத்து
தான் மட்டும்
இரசித்து மகிழ்ந்த
வானம்
அழகு முகம்
வெளியில் தெரிந்ததால்
சுற்றி வர
நடந்து கொண்டிருக்கும்
ஆர்ப்பரிப்பு கண்டு
சோகமாய் முகாரி
இசைத்து
சிறு சிறு
துளிகளாய் கண்ணீர்
பெருக்கி
பெருமழையாய்
தேம்பி
அழுது கொண்டிருக்கிறான்.