சற்றுப்புறத் தூய்மை
சுற்றுப்புறத் தூய்மை !
*********
மண்ணும் மணிநீரும் மயங்கிடா வானும் /
உண்ணும் உணவும்
உயிர்வளியும் நமதே!
இன்றோடு முடியாது இயங்கிடும் பேருலகு /
என்றென்றும் நிலையானால் எதிர்காலம் பயனாமே !
நீரினிலும் நிலத்தினிலும் நீக்கிடுக மாசினையே/
வேரினிலும் பாரிலும் வேரறுப்போம் கழிவினையே/
மாசில்லாச் சூழலிலே மானுடமும் வாழ்ந்துவிடின் /
காசினியில் இயற்கைக் காலமெலாம் நீண்டிடுமே/
கரிவாயும் பிறவாயும் கழிநீரும் வேண்டாம் /
சரியானப் பொறிகளால் சகத்தினைக் காப்பொமே !
-யாதுமறியான் .