தாய் மொழியடி
அணையாத சுடர் விளக்கே
ஆதவனே...! ஆழியே...! நீள்வானகமே...!
இயல் கொண்ட எழிலே
ஈகை திரு நாளே
உறங்காமல் விழித்தோங்கும் சூரியனே
ஊரெல்லாம் ஓங்கும் ஆதியே
எங்கும் திகழும் அறமே
ஏட்டில் பதித்திட்ட அமுதே
ஐம்புலம் விரும்பும் இசையே
ஒலியாய் நீந்தும் இசையே
ஓயாமல் இனிக்கும் கனிச்சாறே
ஒளவையாய் திகழ்ந்த அறிவே
ஃ ஆனா கேடயமே