இரண்டு செவிடர்களின் சம்பாஷணை

முதல் செவிடு : ஏம்பா சின்னதுரை!
இரண்டாவது செவிடு: என் இரண்டு கண்ணும் திறந்து தாம்பா இருக்கு.சரி நீ என்ன திடீர்னு இந்த பக்கம்!
முதல் செவிடு: இப்போ என்னை எவனும் இடிக்கவில்லை. நீதான் இந்தமாதிரி ஏதாவது குண்டை போடுகிறாய்!
இரண்டாவது செவிடு: என்னை பார்த்தா அணுகுண்டு போடறவன் மாதிரியப்பா தெரியுது?
முதல் செவிடு: என் மனைவி அனுவை நீ தொடக்கூட முடியாது. அப்புறம்தானே நறுக்கிப்போடுவதற்கு. சரி, நீ இனிமேல் இந்த மாதிரி அதிகப்பிரசங்கி தனமா நடக்காதே.
இரண்டாவது செவிடு: ஆமாம், நேற்று அதிக நாட்கள் பிறகு மண்வெட்டியை எடுத்து கொஞ்சம் வெட்டினேன். இடது கை கொஞ்சம் பிசகி விட்டது.
முதல் செவிடு: ஏய் மண்ணாங்கட்டி, நான் எப்போடா உன் வேட்டியை எடுத்து கட்டினேன்? நீதாண்டா என்னுடைய லுங்கி இரண்டை தள்ளிக்கிட்டு போனவன்.
இரண்டாவது செவிடு: நீ பெட்டி வைத்திருப்பதே எனக்கு தெரியாது. நீ சொல்வது போல் நுங்கு இரண்டை கிட்டு தான் எடுத்திருப்பான்.அவனுக்கு நுங்கு என்றால் ரொம்ப பிடிக்கும்.
முதல் செவிடு: நீ புகை பிடிக்கமாட்டாய். வீட்டில் காஸ் ஸ்டோவ் இருக்கு. பின்னே உனக்கு எதுக்கு தீப்பெட்டி வேணும்? அவன் என்ன குழந்தையா, தூங்கு என்றால் தூங்குவதற்கு. உன்னுடைய உபதேசத்தை கொஞ்சம் குறைத்து கொள்.
இரண்டாவது செவிடு: நகை எனக்கு பிடிக்காது தான் ஆனால் என் மனைவிக்கு ரொம்ப பிடிக்கும். நீ சொல்வது போல் தங்கம் என்றால் காஸ்டலி தான். ஆமாம், நீ இந்த விஷயத்தில் எனக்கு உடந்தையாக இருக்கணும். நீ சரியாக சொன்னாய், எங்க பக்கத்துக்கு வீடு நாய், குறைத்து குறைத்தே கொன்னுடும்.
முதல் செவிடு: மனிதன்னு பிறந்தா, பகை நிச்சயமாக இருக்கும்.மனை வாங்கவும் மனசுக்கு பிடிக்கும். ஆனால் நான் பேசாமடந்தையா எப்படி இருப்பது? எனக்கு நாய் என்றாலே அலர்ஜி அப்புறம் ஓநாய் என்றால் என்ன சொல்வது?
இரண்டாவது செவிடு: சரிப்பா, போய் உன்னுடைய வேலைகளை கவனி. நான் நாளைக்கு வருகிறேன்.
முதல் செவிடு: யாருப்பா சிரிப்பா என்னை பார்த்து? பேய் வந்து என் வேலைகளை செய்யுமா. என்ன பேச்சப்பா! நானும் நீ செய்கிறமாதிரி நாளை தள்ளி கொண்டு வருகிறேன்.
இரண்டாவது செவிடு: நீ பேசுவதை கேட்க ரொம்ப சிரிப்பா இருக்குது. எனக்கு பாயும் இல்ல கார்லும் இல்லை. கல்யாணம் ஆகி ஆறு மாசம்தாம்ப்பா ஆகிறது. உனக்கு எங்கேப்பா பேரிச்சம் பழம் கிடைத்தது. எனக்கு கொஞ்சம் கொடுப்பா.கொஞ்சம் சக்தியுடன் இரவு கடன்களை செய்ய முடியும். என்னை நீ ஒண்ணும் தள்ளிவிடவேண்டாம். ஏற்கெனவே நான் தள்ளப்பட்டுவிட்டேன்.
முதல் செவிடு: அப்படியா, ஈச்சம் பழம்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும். நாளை வரும்போது கொண்டுவா. அன்னை பராசக்தி தான் எனக்கு எல்லாமே. கொஞ்சம் கடன் இருக்கு. சீக்கிரம் தீர்த்துடுவேன் நான் மட்டும் என்ன , கல்யாணம் ஆகவில்லையானாலும் பள்ளத்தில் விழுந்து விட்டேன்.
இரண்டாவது செவிடு: சரி நீ நிச்சயம் நாளைக்கு என் வீட்டுக்கு வா.
முதல் செவிடு: நிச்சயமா வாப்பா. நான் காத்துண்டு இருப்பேன்.
இரண்டாவது செவிடு: அப்போ நான் வரேன்பா.
முதல் செவிடு: எனக்கு ஒரு வரம்பும் இல்லப்பா.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Feb-22, 5:00 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 156

சிறந்த நகைச்சுவைகள்

மேலே