அவளிடம் யாசியுங்கள்

பவித்திரம் வேண்டுமெனில்
உன் வாழ்வில்....
பரவசம் வேண்டுமெனில்
அவளிடம் யாசியுங்கள்,

அவள்...
பாதம் பணிந்திட நினையாள்
இருந்தும்...
உன் பாவம் போக்கிடும் உமையாள்,

உன்னிடம்...
அர்ச்சனை வேண்டிட மாட்டாள்
அத்தனைக்கும்...
அவள் எளியாள்,

வசதி வேண்டிட மாட்டாள்
உன் வறுமை போக்கிடும்
வடிவாள்,

நம்...
வாழ்வு சிறக்கவே என்றும்
அவள் வார்த்தை...
மதித்திட வேண்டும்,

நிலவுக்குச் சூரியன் போல
உன் நிலைமைக்கு
அவளே காவல்,

வீரமும் அவளிடமுண்டு
வெகுண்டெழும்...
வீரியம் அவளிடமுண்டு,

தீமை அழித்திடும்
கத்தி...
இந்த உலகுக்கு
அவளே சத்தி.

எழுதியவர் : பெண்ணியம் (3-Mar-22, 10:06 am)
சேர்த்தது : முப்படை முருகன்
பார்வை : 564

மேலே