பாக்கியம் அருளும் ஈசன்

வஞ்சிவிருத்தம்

இறைவா நீயோ மறைவாய்
மறையாய் இருந்தே நிறைவாய்
குறைவாய் பலருள் தெளிவாய்
அறிவால் அறியும் உணர்வாய்

உலகினில் நீயே முதலாய்
தலைவனாய் இருக்கிறாய் பெரிதாய்
புலனால் உணரும் புதிராய்
பலநிலை உருவினை கொண்டாய்

கருவின் கருவியாய் ஆனாய்
திருவாய் திக்கினில் நிறைந்தாய்
குருவாய் பலரினை ஆண்டாய்
அருளால் அனைத்தையும் காத்தாய்

அழகாய் மலராய் மலர்ந்தாய்
உழவால் உணவினைத் தந்தாய்
பழமாய் பல்லுயிர் காத்தாய்
பிழையுள் தெளிவாய் நின்றாய்

அயரா உழைப்பினுள் ஆற்றலாய்
உயரும் போதினில் உற்சகமாய்
அயரும் நிலையில் உறக்கமாய்
முயலும் நேரத்தில் தெளிவாய்

நீக்கமே இல்லா நிறைவாய்
காக்கும் வகையில் செறிவாய்
ஆக்கிய ஈசனே நீதான்
பாக்கியம் அருளும் கதிரவன்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (4-Mar-22, 9:34 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 51

மேலே