குருதியும் வழிந்ததுவே

நாம் தனிமையில் இருந்த நாட்களில்
அந்த இனிமையான நொடிகளில்
நீ .....
விளயாட்டாய் செய்த
ஒவ்வொரு செயல்களும்....
ஊடலில் நீ கொண்ட
பொய் கோபங்களும்....
' எரும மாடு ' என்று என்னை
கொஞ்சிய கொஞ்சல்களும் .....
என் தலையில் உன் விரல்கள்
செய்த மாயா ஜாலங்களும்....
நீ பிரிந்த போது
சுடும் நினைவுகள் அத்தனையும்
ஒவ்வொரு ஆணியாய்
ஆழப் பாய்ந்து
என்னை சிலுவையில்
அறைந்ததுவே.....!
என் இதயத்தில்
குருதியும் வழிந்ததுவே....

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (31-Mar-22, 12:37 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 491

மேலே