பிரிந்தே போகுமடி
உன்...
விழியோரப் புன்னகையில் - நான் 
விழுந்து விட்டேனடி. 
உன்...
இதழோரப் புன்முறுவலில் -  என் 
இதயம் தொலைத்தேனடி.
காற்றாட நீவிட்ட கூந்தலில் - நான் 
காற்றாடியாய் பறந்தேனடி.
நாட்டியமாடும் உன்னிடை அசைவில் - என்மனம் 
நாட்டியம்  ஆடுதடி.
பூத்துக்குலுங்கும் உன் இளமை - என்னை 
பூப்பந்தாய் ஆட்டுதடி.
பாத்துப் பேசும்போது உன் தெத்துப்பல் - என்னை 
பித்துப்பிடிக்க வைக்குதடி.
ஊடலில் நீ கோபமாய் பார்க்கும்போது - தொடர் 
பட்டாசாய் வெடிக்குதடி.
பேசாமல் சிலநாட்கள் நீ மௌனிக்கும்போது 
என்னுலகம் செவிடாய்ப்  போக்குதடி.
என்னைவிட்டு தனியே  நீ 
கனவிலும் பிரிந்து போகாதேடி.
பிரிந்தால் அக்கணமே எந்தன் உயிர் 
பிரிந்தே போகுமடி..

