நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ – நாலடியார் 209

நேரிசை வெண்பா

நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார்
மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும்
இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு
துன்புறுவ துன்புறாக் கால் 209

- சுற்றந்தழால், நாலடியார்

பொருளுரை:

சிறந்த மலர்களாற் தொடுக்கப்பட்ட குளிர்ந்த மாலையை யணிந்த மாதே! இறக்கும் வரையிலும் தம் உறவினர் இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்து அவரோடு துன்புறுவன துன்புறாவிடின், உறவினர்க்கு உறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?

கருத்து:

சுற்றந் தழுவுதலால் துன்பம் வரினும் அதுவே செய்யத்தக்கது.

விளக்கம்:

அவரோடு துன்புறாக்கால் மறுமையுஞ் செய்வதொன்றுண்டோ வென்க.

எழீஇயென்றார். கிளர்ச்சியோடு தொடர்ந் தென்னும் பொருட்டு,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Apr-22, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே