பிறவிக்கடன்

"கருவின் உயிர் காத்து,
பத்து மாதம் அதன் மெய்
காத்து,

உயிரும், மெய்யுமாய்
கலந்து இருப்பவளுக்கு,

மெல்லினமாய் இருந்து,
இடையில் சிசுவை சுமந்து,
வல்லினமாய் தன்னை
மாற்றிக் கொண்டவளுக்கு,

சலிப்பில்லாமல்
கருப்பையில் நம்மை
சுமந்தவளுக்கு,

தித்திக்கும் பைந்தமிழ்
அமிழ்து தோய்த்து
அளிப்போம்
'அன்னையர் தின வாழ்த்து!'.

போதுமா?. .......
ஒரு நாள் போதுமோ?
வாழும் நாள் வரை
நினைத்தாலும்
எம் பிறவிக்கடன்
எந்நாளில் தீருமோ?

ஆயினும் வணங்கி
வாழ்த்துகிறோம்,

வாழ்க தாய்மையே
என்றும் நீ புகழோடு!

வாழும் இப்பூவுலகமே
வரும். என்றென்றும்
உன் பின்னோடு. "

எழுதியவர் : (7-May-22, 2:23 pm)
சேர்த்தது : லக்க்ஷியா
பார்வை : 550

மேலே