நவமல்லிகை - இருவாட்சி - நேரிசை வெண்பா
நவமல்லிகை (இருவாட்சி)
நேரிசை வெண்பா
கண்ணொளியும் மெய்யிற் கமழ்மணமும் நீடழகும்
நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்
கங்குறும்வாழ் வார்குழலே காரமொடு வெப்புமிகத்
தங்குமிரு வாட்சிமரத் தால்
- பதார்த்த குண சிந்தாமணி
இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.