நவமல்லிகை - இருவாட்சி - நேரிசை வெண்பா

நவமல்லிகை (இருவாட்சி)
நேரிசை வெண்பா

கண்ணொளியும் மெய்யிற் கமழ்மணமும் நீடழகும்
நண்ணும் வலிமூர்ச்சை நாசமாம் - பண்ணளியும்
கங்குறும்வாழ் வார்குழலே காரமொடு வெப்புமிகத்
தங்குமிரு வாட்சிமரத் தால்

- பதார்த்த குண சிந்தாமணி

இம்மூலிகைக்கு இருவாட்சி என்ற பெயரும் உண்டு. இது கண்ணொளி தருவதுடன் உடனுக்குடன் நன்மணத்தையும் வனப்பையும் உண்டுபண்ணும். மூர்ச்சை நோய் நீங்கும். இதன் இலையை மார்பில் வைத்து கட்ட பால்சுரப்பை நிறுத்தும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-22, 4:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே