காட்டு பார்க்கலாம்

நேரிசை ஆசிரியப்பா


பூனைகள் புனைப்பேர் வைத்து தமிழர்
என்றவர் தமிழ்கெட புறப்பட் டுள்ளார்
கற்காத் தமிழினை அழிக்க இடிக்கு
காளா னாக ஆங்காங்கே மின்னலில்
பூத்த நஞ்செனைப் பரவி நிற்கும்
கட்டி வைத்து தோலதை உரியும்
சாவது உறுதி தின்னக்
காளான் நீக்கிசித்தர் வாகடம் பாரே


நேரிசை ஆசிரியப்பா


நூலை விரித்து ஆதா ரம்சொல்
கல்தோன்றி மண்தோன்றா முன்னேத் தோன்றியத்
தமிழென் றான்பார் காக்கை தன்குஞ்
சைப்பொன் குஞ்சென் றுத்தான் சொல்லும
அகத்தியன் தமிழைப் படைத்தான் சான்று
உண்டுபார் பலநூல் சித்தர் நூல்கள்
அகத்தியன் சீடனே கந்த வேளின்
அகத்திய னுடனே அன்று வாழ்ந்தோர்
பேசிய மொழியெது விளக்கு வாரிலை
மறந்து தமிழே முதல்மொழி எனச்சொன்னார்
ஆசை யால்சொன் னாரின்று
எதையும் ஆரா யாசொல் லாதே


விளக்கம்

திராவிட அரசாங்கம் ஏற்பட்ட பின்பு தமிழறிஞர்
வரலாறு மறைக்கப் பட்டு அறிவீலிகள் எல்லாம்
அறிஞர்களென்று நுழைக்கபட்டு வரலாறென்று
புத்தகத்தில் தவறாக வந்துள்ளது. அதைப் படித்த
இன்றைய அர வேக்காடுகள் ஆங்காங்கே
மேதாவிகள் போல நினைத்து தைரியமாக
ஒரு இனத்தை ஏற்கனவே செத்த் பாம்பை இவர்களும்
அடிக்கிறார்கள். இந்த மூடர்கள் கோனார் நோட்சை
படித்து விட்டு கோட்டைவிட்டு தேறிய ஞான சூன்யங்கள்.
எதையும் பொழிப்புரை படிக்காமல் புலவர்கள் எழுதிய
ஒரிஜினல் புத்தகத்தை படித்து எழுத வேண்டும்.
இல்லையென்றால் அவமானப் படுத்தப் படுவார்கள்



.....

எழுதியவர் : பழனி ராஜன் (18-May-22, 5:08 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே