நாளெல்லாம் புன்னகை

நாளெல்லாம் புன்னகை..
---------------

காலையில் நடந்ததும் காஃபி- அதில்
கலந்து சுகித்திடும் வாசி!
வேலையின் இடையிலும் சேதி - பல
சொல்லும் எந்தனின் பாதி !

பகலிலும் இரவிலும் பரவும் - ஒரு
பாகம் இன்றியே நிரவும்!
புகழிலும் மகிழ்விலும் புலரும் -என்றும்
புதிது புதியதாக மலரும் !

பயிற்சிகள் திறமைகள் கூட்டும் - உன்னை
பலர்முன் உயர்த்தியே காட்டும்!
முயற்சிகள் வெற்றிகள் ஈட்டும் -அங்கு
முத்தெனப் புன்னகை பூக்கும் !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (23-May-22, 4:24 pm)
சேர்த்தது : யாதுமறியான்
Tanglish : naalellam punnakai
பார்வை : 403

மேலே