என் அன்பு சகோதரா
உடன்பிறப்பே...
என் உயிர்த்துடிப்பே....
தாய் மடியை பகிர்ந்தோம்
தன்னலத்தை துறந்தோம்
நேசத்தை வளர்த்தோம்
நினைவிருக்கும் வரை நிலைத்தோம்......
அன்பில் அண்ணனாக
அரவணைப்பில் ஆண்டவனாக
சகிப்புதன்மையில் சகாதேவனாக
சாதிக்க தூண்டும் சகோதரனாக
தடைகளை வெல்லும் தமையனாக
தாங்கிப் பிடிக்கும் தாயுமானவனாக
காலம் கடந்த உறவாய்
காணிக்கை இல்லா வரவாய்
பிரிக்க முடியா பந்தமாய்
மறக்க முடியா உள்ளமாய்
உயிர் இருக்கும் வரை உடன்பிறப்பாய்
என்றும் என் உயிர்த்துடிப்பாய்....