நாய் விரட்டும் போது

ஒரு கல்லே
பெருந்துணையாகும்
நாய் விரட்டும் போது --- (க)

கடுஞ்சொல்லே
நற்றுணையாகும்
பழியை விரட்டும் போது --- (உ)

இறைவனும் அஞ்சுவார்
இக்காலத்து
மாந்தரின் சொற்செயலைக் கண்டு --- (ங)

மறைகளை எழுதினார்கள்
மனிதர்யாவரும்
தெளிவு பெற்று சிறப்படைவே --- (ச)

கல்லும் சொல்லும்
நல்வழியை
காண்போர் கண்ணோட்டத்தின்படி --- (ரு)

மண்ணின் பள்ளத்தில்
நீரும்மரமும்
நிலைக்கும் காற்றோடுநெருப்பு நகருமே --- (சா)

முறையாக கற்றோர்
நடக்கார் முறைதவறி
நடப்பின் செறுக்குள் கட்டுண்டார் --- (எ)

ஆர்வமே கற்கும்வழி
அதுவின்றி
கற்கும் கல்வி பயனளிக்காது --- (அ)

அணுவே பெருமாற்றல்
அதைக்காணுதலரிது
ஆற்றலில் உயர்ந்தவை மறைவாய் --- (கூ)

உலகில் யாவும்
தன்னியல்பிலே
மனிதவிலங்கே எதிரியல்பாய் அறிவினால் --- (ய)
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Jun-22, 6:39 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 43

மேலே