என்னை நானே மணந்தேன்

பெண் ஒருத்தியை மணந்து
எதற்காக சண்டை சச்சரவு
மனக்கசப்பு மன உளைச்சலை
வரவழைக்க வேண்டும்?

உயிர் நீங்கும் வரை
தனிக்காட்டு ராஜாவாக
வாழவே ஆசை கொண்டேன்
தொல்லைகள் இன்றி வாழ!

அதற்கென்ன வழியென்று
சிந்தித்துப் பார்த்தேன்.
பெண் ஒருத்தி தன்னையே
மணந்து கொண்டதாகத் தகவல்.

ஒருபெண் தன்னையே மணக்கக்த்
துணிவு கொண்டு மணந்தாளே
அவள் அல்லவா வீரப்பெண்மணி!
அவளன்றோ பாரதியின் புதுமைப்பெண்

என்னை நானே மணக்க
என்னுள் எழுந்தது ஆசை
இதுவே என் அழைப்பிதழ்
வாருங்கள் நண்பர்களே வாழ்த்த!

எழுதியவர் : மலர் (10-Jun-22, 11:42 am)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 62

மேலே