நான் தீயிலேரியும் வரை

அருகில் இல்லாமல்
அகத்தில் இருந்து கொண்டு
அனுதினமும் உனை
அன்பால் நினைக்க செய்தவள் நீயடா

இன்னல் நிறைந்த வாழ்வை
இதமாக கொடுத்தவள் நீயடா
இருளில் நான் கிடக்கையிலே
இன்ப வார்த்தையால் ஒளி தந்தவள் நீயடா

முழுசாய் உனை நினைத்து
முற்றிலும் எனை மறந்து
துக்கத்தில் ஆழ்ந்து துயரத்தில் முழ்கி
துயில் கொள்ள மறுத்த என் விழிகளுக்கு

உன் தூய நினைவுகளை தந்து துயர்
துடைக்க செய்தவள் நீயடா
தவிப்புகளோடு நான் இருக்கையிலே
தாயென எனக்கு தாலாட்டு இசைத்தவள் நீயடா

சிந்திக்க நான் நினைக்கையிலே
உன் சிறு சிறு நினைவுகளை
சீற்றம் கொள்ளாமல் சிந்தியவள் நீயடா

தாய்க்கு பின் தாயாய் ஆனவளே
சிந்திய உன் நினைவுகளை
கவியெனும் திரையிட்டு காட்டுவேன்
நான் தீயிலேரியும் வரை...........................[விஜய் கரன்]

எழுதியவர் : விஜய் கரன் (6-Oct-11, 5:14 pm)
சேர்த்தது : somapalakaran
பார்வை : 320

மேலே