நாரைக்கறி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நாரைக் கறியருந்த நாறுகரப் பான்புண்ணும்
ஊரைத் தொடர்ந்துதொடர்ந்(து) ஒட்டுங்காண் - பாரித்த
மேகமொடு வாதம் விளையுமே நீரிழிவுக்
காகுமென் பார்கள் அறி

- பதார்த்த குண சிந்தாமணி

இதனை உண்டால் சீழ் கரப்பான், சிலந்தி, கபம், வாதம் இவை உண்டாகும்; அதிமூத்திரம் நீங்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jun-22, 9:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே