நாமாயிருத்தல்
“நேற்றைகளை மறந்துவிடுங்கள்!” ஒருவர்.
இன்றுகளில் வாழலாம் எனத் தோன்றியது.
“இன்றுகளின் அற்ப சுகங்களில் திளைக்காதீர்!”
இன்னொருவர்.
நாளையை எண்ணி இந்நாளை களி(ழி)க்கத் தோன்றியது.
“நாளைகளை எண்ணி இன்றைத் தொலைக்காதீர்!” மற்றொருவர்.
மீண்டும் இன்றுகளுக்குள் தோன்றல்.
இன்றும் வேண்டாம்
நேற்றும் வேண்டாம்
நாளையும் வேண்டாம்
நாம் நாமாயிருத்தலே வேண்டும்!
நர்த்தனி