வழியறியா வழிப்போக்கன்

எல்லையின்றி திரிந்தேன்,
ஏதுமின்றி அலைந்தேன்,
எங்கிருந்தோ வந்தாய் மேகமாக,
ஏகமாய் நின்றாய் நிழலாக,

இளைப்பாற விடுவாயோ,
இதமாக குளிர்வாயோ,
இடம் நகர்ந்து செல்வாயோ,
இல்லை பின்தொடரச் சொல்வாயோ,

இடமறியாது தவிக்கிறேன் நான்,
இனம்புரியாது பதைக்கிறேன் நான்,
வழியறியா வழிப்போக்கன் வாழ்வில்
வழிகாட்டியாய் தொடர்வாயாக...

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:19 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
பார்வை : 73

மேலே