காதல் பதுமை
காதல் என்றவுடன்
என் உள்ளத்தில்
மெல்லிய உணர்வால்
இணைந்தாய்...!!
நீ வெட்கப்பட்டு
தலை குனிந்து
என் மார்பில்
சாய்ந்து கொண்டாய்...!!
காலமெல்லாம்
என்னோடு தான்
உந்தன் உறவென்று
எந்தன் காதோடு
சொன்னாய்...!!
என் காதல் பதுமையே
உன் வாய் மொழியே
எனக்கு வேத வாக்கு
காதல் வாழ்கவென்று
சொல்லி உன்னை
அனைத்துக் கொண்டேன்..!!
--கோவை சுபா