காதல்

காதலுக்கு மேல் ஏதாவது உண்டா சொல்
என்று அவளிடம் நான் கேட்க அவள்
'இன்னும் நீ காதல் யாதென்றே அறிந்திடவில்லை
என்றாள் என்னை வியப்பில் ஆழ்த்தி
பின்னர் கூறினாள், ' காமத்தைக் கடந்தது
காதல் அது தூய அன்பின் உறைவிடம்
ஆக காதல் ஆகாயம் அதற்கு
எல்லை ஏதும் இல்லை அதற்குமேல்
ஒன்றும் இல்லையே அறிவாய்
என் அன்பே என்றாள்' அதைக்கேட்டு
அவளை என்னவளாய் அடைந்ததில்
பெருமை அடைந்தேன் அளவிடமுடியாது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-22, 5:00 am)
Tanglish : kaadhal
பார்வை : 112

மேலே