வலிகளை நான் மட்டுமே சுமக்கிறேன் 555
***வலிகளை நான் மட்டுமே சுமக்கிறேன் 555 ***
ப்ரியமானவளே...
உயிரோடு உன் நெஞ்சில் என்னை
புதைத்துவிட்டாய் காதலால்...
இன்று தனிமை என்னை
கொள்கிறது உன் பிரிவால்...
என்னை புதைத்தாலும்
எரித்தாலும் உடல்மட்டுமே மறையும்...
என் உயிர்
என்றும் மறையாது...
கல்லூரியில் நீயும் நானும்
கைகோர்த்து வாழ்ந்த நாட்கள்...
மறையவில்லை
இன்றளவும் என்னில்...
குளிர்காலத்தில் புல்வெளியில்
தூங்கும் பனித்துளி போல...
கோடைக்காலத்திலும் என்
இமைகளில் நீர்த்துளிகள் தூங்குகிறது...
எனக்கு சித்திரை வெயிலில்கூட இந்த பூ
உலகம் இருளாகவே தெரிகிறது...
நீ
என்னருகில் இல்லாததால்...
ஏட்டு கல்வி
கற்கசென்ற கல்லூரியில்...
காதல் கல்வி நானாக
படித்ததால் என்னவோ...
வலிகளையும் நான்
மட்டுமே சுமக்கிறேன்...
உன்னை
மறக்கவும் முடியவில்லை...
வண்ண பூக்களை
ரசிக்கவும் மனமில்லை...
காற்றாற்று
வெள்ளம் போல...
என் வாழ்க்கையும்
ஓடிக்கொண்டே இருக்கிறது...
சேருமிடம் தெரியாமலே.....
***முதல்பூ.பெ.மணி.....***