மரணத்தை தேடி

அவலத்தை தந்து
எம்மை
அகதியாக்கி அலைய வைத்தீரே!

மரணத்தை அளித்து
எம்மை
கால்களில்
மண்டியிட வைத்தீரே!

இன்று
அத்தனையும் மறந்தவர்களாய்
உங்கள் காலையே
சுற்றறிச் சுற்றி வருகிறோம்
விளக்கினைத் தேடிவரும்
விட்டில் பூச்சிகளாய்!


நாகதேவன் ஈழம்.

எழுதியவர் : நாகதேவன் ஈழம் (18-Aug-22, 3:41 am)
சேர்த்தது : நாகதேவன் ஈழம்
Tanglish : maranathai thedi
பார்வை : 70

மேலே