என்னை மயக்கும் முல்லை மலரே 555
***என்னை மயக்கும் முல்லை மலரே 555 ***
ப்ரியமானவளே...
நான் உன் கண்ணை
பார்த்து பேசும் போதெல்லாம்...
எனக்குள்
வார்த்தைகள் வரமறுக்குதடி...
நான் கேட்கும்
கேள்விகளுக்கெல்லாம்...
உன் பார்வையாலே
எனக்கு பதில் சொல்கிறாய்...
மறுவார்த்தை
பேச இதழ்கள் பிரிந்தாலும்...
உன்
கண்ணின் இமைப்பில்...
என்னை முழுவதும்
மறக்கிறேனடி...
நான் உன்னை கண்டதும்
காதல் கொண்டேன்...
இதுவரை நான்
உன்னைப்போல் பார்காததுபோல...
தினம்
ஒரு புகைப்படம்...
உன் கைபேசியில்
மாறிக்கொண்டே இருக்குதடி...
உன் அழகை படம் பிடிக்கும்
கைபேசிக்கு அதிர்ஷ்டம்தான்...
கண்கள் எல்லோருக்கும்
பார்க்கத்தான் இருக்கிறது...
உனக்கு மட்டும் என்னை
பைத்தியமாக்க இருக்கிறது...
இமைக்காத விழிகளையும்
மேயாத கருவிழியையும்...
எங்கே வாங்கினாய் என்னை
மயக்க முல்லை மலரே...
உன்
விழிகளுக்கு முன்னே...
என் விழிகள்
ஆனது ஊமைவிழிகள்.....
***முதல்பூ.பெ.மணி.....***