நினைவெல்லாம்..!!

அவள் நினைவுத்தூறல்
என்மீது படும் போதெல்லாம்..!!

என்னில் பெருக்கெடுத்து
ஓடும் கவிதை வெள்ளம்..!!

காடுமேடு பாராமல்
மொத்த வார்த்தையும்
சூரையாடுகிறது..!!

அலையோடு சேர்ந்து
பொங்கும் சுனாமியாய்..!!

கடலோடு வருகிறது
அவளை வர்ணித்தே
ஆக வேண்டும் என..!!

எழுதியவர் : (2-Sep-22, 7:20 pm)
பார்வை : 95

மேலே