கொடுத்துண்டு வாழ்தலே குறையா வாழ்க்கையாம் – அறநெறிச்சாரம் 168
இன்னிசை வெண்பா
நொறுங்குபெய் தாக்கிய கூழார உண்டு
பிறங்கிரு கோட்டொடு பன்றியும் வாழும்;
அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற் றெல்லாம்
வெறும்பேழை தாழ்க்கொளீஇ யற்று 168
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
நொய்யாற் சமைத்த கூழினை வயிறார உண்டு விளங்குகின்ற இரண்டு கோரப் பற்களோடு பன்றியும் வாழும்;
ஆதலால் அறத்தினைச் செய்து வாழ்வதே மக்கள் வாழவேண்டிய இல்வாழ்க்கையாகும்,
அறத்தினைச் செய்யாது தம்முடலைப் பேணி வாழ்வாருடைய இல்வாழ்க்கை யெல்லாம் தன்னகத்து ஒன்றுமில்லாத பெட்டியைத் தாழிட்டுப் பூட்டிவைத்தல் போலாம்.