சொல்நிறை செல்வனேநீ சொல் அவள்

மல்லிகைப் பந்தலில் உலவிய மாலைத் தென்றல் மனம்மாறி
மெல்லிய புன்னகையை செந்தமிழ் இதழ்களில் தேனாய் தவழவிடும்
மெல்லக் கவியும் மேற்கு வானழகை இமைகளில் ஏந்திடும்
மல்லிகையோ வேறுமலரோ சூடா உன்கூந்தலில் ஆடுவ தேனோ jQuery17104585722297349586_1662998564209?
மல்லிகைப் பந்தலில் உலவிய மாலைத் தென்றல் மனம்மாறி
மெல்லிய புன்னகையை செந்தமிழ் இதழ்களில் தேனாய் தவழவிடும்
மெல்லக் கவியும் மேற்கு வானழகை இமைகளில் ஏந்திடும்நீ
சொல்வாய் உரையில் இல்லை கவிதை மொழியில் சொல்வாயோ ?
சொல்கிறேன் வெண்பாவில் உன்வேலை என்னாகும்
சொல்நிறை செல்வனேநீ சொல்
----யாப்பில் கேள்வியில் கவிஞன் கவிதைகள் முறையே இரு அறுசீர் கழி நெடில் ஆசிரிய விருத்தம்
காதலியின் பதில் ஒரு விகற்ப குறள் வெண்பா