விண் வெளியில் பறக்க

உன் கனவோடு தனியாக
ஏன் இங்கு வந்தேன் ?
என் மகராணி உனைக்காண
நான் ஏங்கி நின்றேன்.
உன் நினைவோடு விளையாட
ஓடோடி வந்தேன்.
உன் ரசனைக்கு விருந்தாக
மலர் சூடி வந்தேன்.

உன் பொன்வண்ண முகத்தை
நான் கைகொண்டு ஏந்த..
என் கைபட்ட மயக்கத்தில்
மலர்விழிகள் மூட...
அருகில் உன் முகம் கண்டு
என் மனது ஏங்க
தடுமாறி போனேன்
உன்னிடம் உண்மை கூற..

நான் பாடும் பாடல்
உன் இதயத்தை திறக்க...
அதைக்கேட்டு உன் முகமோ
கனிந்திங்கு சிவக்க
இதழ்திறந்து சிலவார்த்தை
நீ மெல்ல உதிர்க்க
சிறகொன்றை நான் விரித்து
விண்வெளியில் பறக்க

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (12-Sep-22, 9:14 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 101

மேலே