வீக்கென்டில் வந்து விளக்கு

பூக்களுக்குப் புன்னகை சொல்லித் தருபவளே
பாக்கள் எழுத இலக்கணம் தேவையா
வீக்கென்டில் வந்து விளக்கு !

பூக்களுக்குப் புன்னகை சொல்லித் தருபவளே
பாக்கள் எழுத இலக்கணம் தேவையா
வாரமுடி வில்வந்து சொல் ! ( மாற்று ஈற்றடி )

வீக்கென்ட் --week end ---தங்லீஷ்

பாக்கள் எழுதிடும் பாவலனே தேர்ந்திடுவாய்
பூக்கள் அழகும் நறுமண மும்போலும்
பாக்கள் இலக்கணம்அன் பே !

யாப்புக் குறிப்பு :

-மா முன் நிரையும் காய்முன் நேரும் வந்து இயற்சீர் வெண்சீர் வெண்டளை பெற்று
வெண்பா இலக்கண அமைதியில் புனையப்பெற்ற சிந்தியல் வெண்பாக்கள்
சிந்தியல் மூன்று அடிகளாலும் குறள் இரு அடிகளாலும் அளவடி நான்கு அடிகளாலும் அமையும் பா
இது பா ; பாவினம் என்பது வேறு
வேறுபாட்டினை யாப்பார்வலர்கள் தேர்ந்த யாப்பாசிரியர்கள் யாப்புநூல் வழியில் மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-22, 9:54 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே