ரோசாப்பூ
அது ஓர் அழகான ஒத்தை ரோசாப்பூ
அதன் அழகை நான் ரசித்துக்கொண்டே
இருக்கையிலே எங்கிருந்தோ வந்த
அவன் கொஞ்சமும் நினையாது அந்த
அழகு மலரைக் கொய்துவிட்டான் அவன்
கையில் அது ஏனோ வாடியது வாடிய
மலரைக் கொய்தவன் கீழே எறிந்து
அதன் மேல் நடந்தும் சென்றான்
சில அழகு பெண்களின் வாழ்வும்
இப்படித்தான் மலர்ந்து நிலைத்திருக்கும்
முன்னேயே அழிந்து விடுகிறது

