இரவும் பகலும் - புதுக்கவிதை

இரவில் தோன்றும் நிலவு
பகலின் ஒளியையும் கதகதப்பையும்
எண்ணிப் பொறாமை கொள்கிறது;
பகலைப் பார்க்கத் துடிக்கிறது.

காலையில் உதிக்கும் கதிரவனோ
இரவுக்காகவும், அது தரும்
தனிமைக்காகவும் ஏங்குகிறது;
இரவைக் காண மேற்கைத்
தேடி விரைகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-22, 3:12 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 170

மேலே