இரவும் பகலும் - புதுக்கவிதை
இரவில் தோன்றும் நிலவு
பகலின் ஒளியையும் கதகதப்பையும்
எண்ணிப் பொறாமை கொள்கிறது;
பகலைப் பார்க்கத் துடிக்கிறது.
காலையில் உதிக்கும் கதிரவனோ
இரவுக்காகவும், அது தரும்
தனிமைக்காகவும் ஏங்குகிறது;
இரவைக் காண மேற்கைத்
தேடி விரைகிறது.