உறக்கமின்றி அலைகிறேன் 555

***உறக்கமின்றி அலைகிறேன் 555 ***

ப்ரியமானவளே...


காத்திருந்தேன் உன் நினைவில்
நீ காதலோடு வருவாய் என்று...

காத்திருந்த என் இதயம்
கண்ணீரின் வெப்பத்தில்
வேகுதடி...

நீ மறந்ததால்தான் என் உடலுக்கு
உயிர்கூட சுமையாக இருக்குதடி...

எத்தனையோ துன்பங்கள்
கடந்த என்னால்...

காதல் உணர்வு கொடுத்த
துன்பம் என்னை கொள்ளுதடி...

உன்னை
நினைக்கும்
போதெல்லாம் கலங்கும்...

என் விழிகளுக்குத்தான்
தெரியும் என் அன்பின் ஆழம்...

நீ மறந்து
சென்ற நாள் முதல்...

நான்
உறக்கமின்றி அலைகிறேன்...

நான் நிம்ம
தியாக
உறங்க ஒருநாள் சொல்லடி...

அது கல்லறையாக
இருந்தாலும் சந்தோசம்தான்...

என்
நிரந்தர உறக்கத்திற்கு.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (15-Oct-22, 5:09 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 639

மேலே