விடை கிடைக்குமா

என் வேட்கைகள் நீளுமா?
என் தாகங்கள் தீருமா?
என் ஏக்கங்கள் அடங்குமா?
என் கோபங்கள் குறையுமா?

என் முயற்சிகள் தொடருமா?
என் வீழ்ச்சிகள் முடியுமா ?
என் எழுச்சிகள் கூடுமா?

என் வலிகள் விலகுமா?
என் மகிழ்ச்சிகள் நிலைக்குமா?
நினைத்தவை நடக்குமா?
நடப்பவற்றை மனம் ஏற்குமா?
எதிர்காலம் பதில் கூறுமா?


இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா

எழுதியவர் : அறூபா அஹ்லா (3-Nov-22, 12:27 pm)
சேர்த்தது : அறூபா அஹ்லா
Tanglish : vidai kidaikkumaa
பார்வை : 110

மேலே