தேனீக்கக்கள் வந்து கவிதையை மொய்க்குது ஏனடி தோழி

பூவினில் சிந்தும் தேனை எடுத்து உன்
புன்னகை இதழ்களில் யார் வைத்தார்
பூநிகர் புன்னகை தேனிதழை நான்
பாவினில் வைத்தேன் தேனீக்கக்கள் வந்து
கவிதையை மொய்க்குது ஏனடி தோழி !


பூவினில் சிந்திடும் தேனை எடுத்துனது
புன்னகை பூவிதழ் கள்தன்னில் யார்வைத்தார்
பூநிகர் புன்னகை தேனிதழை நானெனது
பாவினில்வைத் தேன்தேனீக் கள்சேர்ந்து வந்து
கவிதையை மொய்க்குது ஏனடி சொல்லிடுவாய்
தோழிநீ அன்பில் எனக்கு !

----ஒரே கற்பனையின் இரண்டு வடிவம்
முதல் கவிதை இயல்பு வரிகளில்
இரண்டாவது யாப்பில் அமைந்தது
பயில்வோர் கூர்ந்து கவனித்து அடையாளம் கண்டுகொள்ளவும்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Nov-22, 10:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37

மேலே