ரஞ்சிதமே

பூவுலகின் பேரழகி .....10

உன்னைக் காணும் வரை தான்
அவன் பெயர் புத்தன்
கண்ட பிறகு அவன் பெயரோ பித்தன்

உன் கூந்தலைச் சேரும் வரை
அதன் பெயர் மல்லிகை
சேர்ந்தவுடன்
அதன் பெயர் மூலிகை

ஒரு பெண்ணை திருமணம் செய்தால் போதும்
அவன் புருஷன் ஆகிறான்

ஆனால் உன்னைத் திருமணம் செய்பவன் தான்
இந்தப் பூ உலகிற்கு அரசன் ஆகிறான்

நீ கிறிஸ்டியன் என்று தெரியும் வரை தான் என் பெயர் கிருஷ்ணராஜ் தெரிந்த உடன்
என் பெயர் கிறிஸ்டியன்ராஜ்

பத்மா
உன்னைப் போல்
ஒரு பேரழகியை படைத்ததால்
நிச்சயம் மத்திய அரசு
உன் தந்தை விண்ணப்பித்தால் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்ககும்

பகல் நேரத்தில்
உன் பக்கத்து வீட்டில் இருக்கும் தாய்மார்கள் அனைவரும்
உன்னை
நிலவென்று காட்டித்தான்
தன் குழந்தைகளுக்கு
சாப்பாடு ஊட்டி பசியாற்றுகிறார்கள்

நிலவில் வடை சுடும் ஆயா உன் ஆயாவாகத்தான் இருக்க வேண்டும்


உன்னை மரத்திலிருந்து பார்க்கும் காகங்கள் கா கா என்று கரைவதில்லை காதல் காதல்
என்று கரைகின்றன
உன் அழகில் மெய் மறந்து உறைகின்றன

உன்னை காதலித்த அனைவருக்கும் கிடைப்பதென்னவோ அவர்கள் வீட்டு மின்விசிறியில் தூக்கு தண்டனை
நீ காதலிக்கும் ஒருவனுக்கு மட்டும்தான் கிடைக்கிறது உன்னை தூக்கும் தண்டனை

25 ஆண்டுகளாய் தேவர்கள் அனைவரும் தேவதைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள்
அனைவரின் மொத்த உருவமாய் நீ தமிழகத்தில் பிறந்திருப்பது தெரியாமல்.....

உன் பெயரை
எழுதுகையில் எழுத்து இனிக்கிறது பழுத்து

எழுதியவர் : Kumar (13-Nov-22, 8:48 am)
பார்வை : 171

மேலே