ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப் போக்குவார் புல்லறிவி னார் – நாலடியார் 327

நேரிசை வெண்பா

தாமேயும் இன்புறார், தக்கார்க்கு நன்றாற்றார்
ஏமாஞ்சார் நன்னெறியுஞ் சேர்கலார் - தாமயங்கி
ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவார் புல்லறிவி னார் 327

- புல்லறிவாண்மை, நாலடியார்

பொருளுரை:

தாழ்ந்த அறிவினையுடையோர் தாமாகிலும் இன்புறல் அறியார், தகுதியுடைய பிறர்க்கும் நன்மை செய்ய அறியார், தம்முயிர்க்கு அரணாக அமைந்த அறவொழுக்கங்களையும் சேர்ந்தொழுகார்; தாம் மதிமயங்கி முன்னை நல்வினையாற் கிடைத்த செல்வச் செழுமையில் அழுந்தி வீணே தம் வாழ் நாளைக் கழித்தொழிவர்.

கருத்து:

புல்லறிவாளர் தம்வாழ்நாளைத் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வொட்டாமல் வீணாக்கிக் கொள்வர்.

விளக்கம்:

‘ஏமஞ்சார் நன்னெறியென்றது' வீடுபேற்று நெறி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-22, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

சிறந்த கட்டுரைகள்

மேலே